திருமணமான 2 நாட்களில் கர்ப்பிணி பெண் தற்கொலை.! தஞ்சாவூரில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமணமான இரண்டு நாட்களில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் கே.வி.பேட்டை பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் சரண்யா (21), தஞ்சாவூர் மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த உறவினரான விஜயமூர்த்தி என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் சரண்யா கர்ப்பமடைந்தார். இதையடுத்து சரண்யாவிற்கும், விஜயமூர்த்திக்கும் கடந்த 13ஆம் தேதி கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.

இதைத்தொடர்ந்து, இவர்கள் இரண்டு பேரும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விஜயமூர்த்தி வீட்டில் இருந்த நிலையில், நேற்று காலை சரண்யா திடீரென வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டாயில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதையடுத்து சரண்யாவின் தந்தை, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சரண்யா தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pregnant woman commits suicide within 2 days of marriage in Thanjavur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->