பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடக்கம்.!!
pongal gift for cm stalin
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.
21 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், கருப்பு மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
pongal gift for cm stalin