பொங்கல் பரிசுத் தொகுப்பு.. தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல்? உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதன்முதலில் பொறுப்பேற்ற பிறகு பொங்களுக்கான சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதில் பல்வேறு மசாலா பொருட்கள் வழங்கப்பட்டதில் குறைபாடுகளுடன் தரமற்ற பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் அடுத்த வருட பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் மக்களுக்காக வழங்கப்படும் பொங்கல் பரிசு குறித்தான ஆலோசனையில் ஸ்டாலின் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த ஆலோசனையில் 2023 ஆம் ஆண்டு 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க உள்ள நிலையில் கடந்த ஆண்டு வழங்கியது போல் பலவித மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கலாமா அல்லது 1000 ரூபாய் ரொக்கம் வழங்கலாமா என்று ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் பலவித மளிகை பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய், கரும்பு அடங்கிய தொகுப்புடன் ரூ.1000 வழங்கலாம் என ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட கூடிய பொருட்களை தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய வேண்டும் என தஞ்சையை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கக்கூடிய பொருட்கள் தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய செய்யப்படுமா? எனவும் பொங்கல் பரிசு தொகுப்பில் தமிழக அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்பது குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal gift collection Tamil Nadu government to respond High Court branch order


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->