தள்ளாடி தள்ளாடி மயங்கிய போலிஸ் எஸ்.ஐ.! அள்ளிக்கொண்டு ஸ்டேஷனுக்கு சென்ற பஞ்சர் கடை ஊழியர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காலை பணிக்கு வரும்பொழுது, மது போதையில் தள்ளாடி கொண்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரை பஞ்சர் கடை ஊழியர் ஒருவர் காவல் நிலையத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார்.

சென்னையின் முக்கிய நகரின் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக அவர் பணியாற்றி வருகிறார். இரண்டு நாட்களாக பணிக்கு வராத அவர், இன்று காலை 9 மணி அளவில் பணிக்கு கிளம்பி வரும் பொழுது, வழியில் அவர் மது அருந்தியதைப் போல போதையில் தள்ளாடிக்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், தனது புல்லட் வாகனத்தை நகர்த்த கூட முடியாத நிலையில் தள்ளாடியுள்ளதாக கூறப்படுகிறது. அப்பொழுது இதை பார்த்துக் கொண்டிருந்த பஞ்சர் கடை ஊழியர் ஒருவர் அவரை மீட்டு பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளருக்கு, மேல் அதிகாரிகள் விடுமுறை கொடுத்து ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் உண்மையில் மருந்தி இருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police SI Drink and Drive In Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->