வேலூரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் - போலீசாரின் தீவிர முயற்சியால் மீட்பு.!!
police rescue vellore kidnape 4 years old boy
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பவள தெருவை சேர்ந்தவர் வேணு. இவர் தனது நான்கு வயது மகனை நேற்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். பின்னர் சிறுவனை வீட்டு வாசலில் இறக்கிவிட்டுவிட்டு வேணு இருசக்கர வாகனத்தை உள்ளே கொண்டு சென்றார்.
அப்போது, அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் வேணுவின் மகனை கடத்தி சென்றனர். இதனை தடுக்க முயன்ற வேணுவின் முகத்தில் மிளகாய் பொடி வீசிவிட்டு குழந்தையுடன் தப்பித்து சென்றனர். இது தொடர்பாக வேணு போலீசில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் கர்நாடக பதிவெண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த தேவிகாபுரம் என்ற பகுதியில் வைத்து போலீசார் சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர். தொடர்ந்து சிறுவனை கடத்திய மர்ம நபர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுவன் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police rescue vellore kidnape 4 years old boy