பணம் வைத்து சூதாடிய 9 பேரை சுற்றிவளைத்த போலீஸ்!  - Seithipunal
Seithipunal


பாண்டிபஜார் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் படு ஜோராக பட்ட பகலில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் பதவியேற்றது முதல் ரௌடிசம்,கட்ட பஞ்சாயத்து செய்பவர்களை கண்காணித்து அவர்களை ஒடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறார்.குறிப்பாக  சென்னையில் தடை  செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை  விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களைகண்காணித்துகைதுசெய்யகாவல்ஆணையாளர்அருண்உத்தரவிட்டிருந்தார்,அந்தவகையில்  அந்த அந்த  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தீவிர சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ,ரகசிய தகவலின் பேரில் R-4 சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று இரவு, தி.நகர், வடக்கு உஸ்மான் ரோட்டிலுள்ள தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தபோது, அங்கு சிலர் பணம் வைத்து சீட்டுக்கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த  இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தனியார் விடுதி மேலாளர் உட்பட 9 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 8 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.56,400 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக, R-4 சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 9 நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police raided and arrested 9 people who were gambling with money


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->