வாணி ஜெயராமன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான "தீர்க்க சுமங்கலி" என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பிரபல பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வாணி ஜெயராம். 

இவர் தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி என்று பல்வேறு மொழிகளில் பாடல் பாடியுள்ளார். அவர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா என்று ஏ.ஆர். ரகுமான் வரையிலான பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

சமீபத்தில், இவருக்கு மத்திய அரசு சார்பில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாடகி வாணி ஜெயராமன், சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து, அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அவரது இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு தொடங்க உள்ளது. 

மேலும், அவர் உடலுக்கு சுமார் முப்பது குண்டுகள் முழங்கி காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police paid respects with 30 blasts to vani jayaram body


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->