உடலில் தீ பற்றிய நிலையில் சாலையில் ஓடிய இளைஞர்..!!விசாரணை நடத்தும் காவல்துறையினர்...! - Seithipunal
Seithipunal


இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் அருகில் உள்ள பெரியார் நகரில் வசித்து வருபவர்  மாணிக்கம் (38). இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி உள்ளார். கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு தனித்து வாழ்கிறார். இந்நிலையில், அவருக்கும் துர்க்கை அம்மாள் என்ற பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனவி போல வசித்து வந்தனர். இதனிடையே இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனை அடுத்து, கடந்த 12 தேதி மாணிக்கம் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் அவர் சாலையில் ஓடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரின் கள்ள காதலி கொலை செய்ய முயற்சி செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police investigation about Thirupur Issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->