15 வயது சிறுமியுடன் திருமணம்., இளைஞரை கைது செய்த காவல்துறை..!! - Seithipunal
Seithipunal


15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோவில் காவல்துறையினர் கைது செய்தனர். 

வேலூர் மாவட்டம், லத்தேரி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் தொண்டான் துளசி  சேர்ந்த பெருமாள்(31) என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்துக்கு சிறுமி ஒப்புகொள்ளவில்லை என தெரிகிறது. ஆனால், அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அந்த சிறுமி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ஹெல்ப் லைன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சமூகநலதுறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பெருமாள் மற்றும் அந்த சிறுமியின் பாட்டி இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police have arrested a youth who married a girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->