காவல்துறையினர் பணி நேரத்தில் இனி இதை செய்யக்கூடாது-காவல்துறை ஆணையர்.! - Seithipunal
Seithipunal


பணி நேரத்தில் காவல் துறையினர் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் அலுவலகத்தில் சக பணியாளரை செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்தவரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் அலுவலகங்களில் செல்போன்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இதற்கான விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் பணி நேரத்தில் காவல் துறையினர் செல்போன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல்துறை ஆணையர் இன்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police did not use phone in working time


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->