தாய் வீட்டிற்கு சென்ற மனைவி., மோசமான காரியம் செய்த போலிஸ் கணவன்.! அதிர்ந்த சக காவலர்கள்.!  - Seithipunal
Seithipunal


காவலர் ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை செம்பியம் குடியிருப்புப் பகுதியில் பணியாற்றி வந்தவர் ஜோசப். கடந்த 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், புது வண்ணாரப்பேட்டையில் இருக்கும் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி முதல் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவ விடுப்பில் ஜோசப் சென்றுள்ளார். 

இதனிடையே நேற்று காலை ஜோசப் தன்னுடைய வீட்டில் விஷம் குடித்து விட்டார். மயங்கி கிடந்த அவரை அவருடைய சகோதரர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 

இது குறித்த காவல்துறை விசாரணையில், "ஜோசப்புக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். புரசைவாக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் இருவரும் படித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பாக தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய மனைவி கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே தனியே இருந்த ஜோசப் சோகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது' தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police death for fighting with wife 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->