#BREAKING | பல் புடுங்கி பல்வீர் சிங்க் மீது வழக்குப்பதிவு!
police case file palveer singh
நெல்லைய அம்பாசமுத்திரம் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்த விவகாரத்தில், ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி : அம்பாசமுத்திரம் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், விசாரணை அழைத்துச் செல்லப்பட்ட 10 இளைஞர்களின் பற்களை கட்டிங் பிளேடு கொண்டு பிடங்கியதாக புகார் எழுந்தது.
இந்த சம்பவத்தில் பல்வீர் சிங்கை காப்பாற்ற பல முயற்சிகள் திரைமறைவில் நடந்தது சர்ச்சையாகவே, தமிழ்நாடு அரசு சார்பில் விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் 326 இன் கீழ் நெல்லை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை மாவட்ட எஸ்பி.,யிடம் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அறப்போர் இயக்கம், அரசியல்கட்சி தலைவர்கள், ஊடகங்கள் கொடுத்த அழுத்தத்தின் பலனாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
police case file palveer singh