வெடிகுண்டு வெடிக்கப் போகுதாக வந்த போன் கால்.. ஆடிப்போன காவல்துறை.. பரபரப்பான கோவை ரயில் நிலையம்..!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் சூலூர் ரோடு பகுதியில் உள்ள ரயில் நிலையத்திலும் புதிய பேருந்து நிலையத்திலும் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மர்ம நபர் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு அழைத்து தகவல் கொடுத்துள்ளார். இதனால் அதுந்து போன கோவை போலீஸ் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்ந்து தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு ஏதும் கைப்பற்ற படாததால் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கூறிய தகவல் வதந்தி என தெரியவந்தது. இதனை அடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் யார் என தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சூலூர் காவல் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துகாதர் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து வீட்டில் இருந்த முத்துகாதரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு ஏதேனும் அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சூலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police arrested man who said bomb explode at railway station


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->