மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - இளைஞருக்கு வலை வீச்சு - Seithipunal
Seithipunal


திருக்கோவிலூர் அருகே மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் வாய் பேசமுடியாத சற்று மனவளர்ச்சி குன்றியவர். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியை சேர்த்த ராஜா (24) என்ற இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் சிறுமி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

அப்பொழுது சிறுமிக்கு ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ராஜாவிடம் இருந்து சிறுமியை மீட்டு, ராஜாவை கண்டித்தனர். ஆனால் ராஜா, தட்டி கேட்டவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ராஜாவை வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police are looking for a youth who sexually harassed a disabled girl in thirukoilur


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->