பிரஷாந்த் கிஷோர் என்ற கூலிக்காரரரை நம்பி திமுக.. கட்சியையே நிர்வகிக்க தெரியல.., இதுல - வெளுத்து வாங்கிய மருத்துவர் அன்புமணி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்றால் நிர்வாக திறமை, ஆளுமை வேண்டும். பிரஷாந்த் கிஷோர் என்ற கூலிக்காரரை காசு கொடுத்து திமுக கூட்டி வந்துள்ளது என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கும்மிடிப்பூண்டி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் பேசுகையில், " திமுக கட்சியை நிர்வாகம் செய்ய பிரஷாந்த் கிஷோர் என்ற நபரை பீகாரில் இருந்து வரவழைத்துள்ளனர். உங்களின் கட்சியை நிர்வகிக்கவே உங்களுக்கு தெரியவில்லை. தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்றால் நிர்வாக திறமை, ஆளுமை வேண்டும். 

பிரஷாந்த் கிஷோர் என்ற கூலிக்காரரை காசு கொடுத்து கூட்டி வந்துள்ளனர். திமுக ஆட்சி என்றாலே நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து போன்றவை தலைதூக்கி இருந்தது. நிலம் யாரும் உபயோகம் செய்யாமல் இருந்தால் அங்கு சென்று திமுகவினர் குடிசை போட்டுக்கொள்வார்கள். 

எனது உறவினர் ஒருவருக்கே ஊத்துக்கோட்டையில் திமுகவினர் மூலமாக நில அபகரிப்பு நடந்தது. எனக்கே இந்த நிலைமை என்றால், அப்பாவி மக்களின் நிலைமை என்ன என்று பாருங்கள். மு.க ஸ்டாலின் வாயை திறந்து பேசினாலே பொய் தான் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Election Campaign Speech about DMK Prasanth Kishor 18 March 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->