மக்களைப்பற்றி கவலைப்படாத திமுக.. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அனல்பறக்க அதிரடி பேச்சு.!
PMK Dr Anbumani Ramadoss Election Campaign about DMK Could Not Feel Peoples 4 April 2021
திமுக மக்களைப்பற்றி கவலைப்படாத கட்சி. திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.
கும்பகோணம் தொகுதி மூவேந்தர் முன்னேற்ற கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து சோழபுரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், "
திமுக மக்களைப்பற்றி கவலைப்படாத கட்சி. திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மு.க ஸ்டாலினுக்கு எதுவும் தெரியவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய பணிகள் ஒவ்வொன்றையும் செய்வார். மு.க ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியுமா?. சமூகநீதி, வரலாறு, சரித்திரம், இட ஒதுக்கீடு, கணக்கு, மாவட்டங்கள் மற்றும் மாவட்ட வாரியான பிரச்சனைகள் என்று எதுவுமே தெரியாது.
இப்படியாக உள்ள தலைவர், முதல்வராக வேண்டும் என்று கனவில் இருக்கிறார். எனது தம்பிகள் அதற்கு விடமாட்டார்கள். மு.க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு உண்மையாக இல்லை. வாயை திறந்தாலே பொய். திமுக என்பது என்னைப்போல கம்பெனி, குடும்பம் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Dr Anbumani Ramadoss Election Campaign about DMK Could Not Feel Peoples 4 April 2021