கீழக்கரை ஜல்லிக்கட்டு - மஹிந்திரா காரைத் தட்டித் தூக்கிய அபி சித்தர்.!
player abi siddhar won mahindra car in keezhakarai jallikattu
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டது. ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்த அரங்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினை இன்று திறந்து வைத்தார்.
இவருடன், அமைச்சர்கள் ஐ. பெரியசாமி எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, பி. மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்தத் திறப்பு விழாவை அடுத்து அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த நிலையில், தற்பொழுது போட்டியானது நிறைவடைந்துள்ளது.
இந்த போட்டியில் 10 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து, தலா 6 காளைகளை அடக்கி சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன், பரத் உள்ளிட்ட இருவரும் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இதில் முதல் பரிசாக மஹிந்திரா கார் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் பரிசாக பைக் வழங்கப்பட உள்ளது.
English Summary
player abi siddhar won mahindra car in keezhakarai jallikattu