ஆஸ்கர் விருதால் முதுமலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகளவில் சினிமாவில் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த நிலையில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இந்தியாவின் 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆணவ குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் தெப்பக்காட்டில் காட்டு நாயக்கர் பழங்குடியினரான பொம்மன், வெள்ளி தம்பதியினர் யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித் திரிந்தது. இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு வந்து அந்த யானைக்கு ரகு என்ற பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் வளர்த்து வந்துள்ளனர்.

தாயைப் பிரிந்து தவித்த 2 குட்டி யானைகளை பராமரிக்கும் பழங்குடியின தம்பதியின் கதையை 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணப்படமாக உருவாக்கி இருக்கிறார் உதகையை சேர்ந்த இயக்குனர் கார்த்திக் கொன்சால்வ்ஸ். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டில் உள்ள முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானைகள் முகாமினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த குறும்படத்திற்கு நேற்று ஆஸ்கார் விருது கிடைத்த நிலையில், முதுமலை தெப்பக்காடு பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி, இந்த திரைப்படத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடங்களை நேரடியாக பார்த்து ரசிப்பதற்காக முதுமலை தெப்பக்காடு பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Picnicers increased in mudhumalai forest for Oscar award


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->