சிறுமியை காதலித்து வாழ்க்கையை பரிதவிக்கவிட்ட காதலன்.. வளர்ப்பு மகளால் தாய் கொடூர கொலை.. பெரம்பலூரில் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், கீழே குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களது ஒரே மகனான பழனிவேல் கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், பெருமாள் மற்றும் பச்சையம்மாள் தம்பதியினர் ஒரு வயது பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். 

கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக முதியவர் பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழக்கவே, ஒரு வயது குழந்தை 16 வயது சிறுமியாக வளர்ந்துள்ளார். பச்சையம்மாளும் வயது மூப்பால் வீட்டிலேயே இருந்த நிலையில், பள்ளிக்கு சென்று வந்த சிறுமி, அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 6 மாதம் முன்னதாக ரகசிய திருமணம் நடைபெற்ற முடிந்ததாகவும், இதனால் சிறுமி படிப்பை பாதியிலேயே கைவிட்டதாகவும் தெரிய வருகிறது. 

இந்த சட்ட விரோத காதல் திருமணத்திற்கு மூதாட்டி பச்சையம்மாள் வன்மையாக கண்டித்த நிலையில், காதலனிடம் இருந்து பிரிந்து இருப்பதாக சில காலம் நடித்து வந்துள்ளார். மேலும், பச்சையம்மாள் உறங்கிய பின்னர் அலைபேசி மூலமாக காதலனை வீட்டிற்கு வரவழைத்து, வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் சந்தித்துப் பேசி வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இருவரும் மொட்டை மாடியில் இருப்பதைப் பார்த்த பச்சையம்மாள் இருவரையும் கண்டித்த நிலையில், மணிகண்டனை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார். இந்த சமயத்திலேயே கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பச்சையம்மாளின் சடலமானது கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலும், தீப்பிடித்து வளர்ப்பு தாய் பலியானதாகவும் ஊர் மக்களிடம் நடித்து நம்பவைக்கவே, தாயின் மரணத்திற்கு பின்னர் காதலனுடன் சிறுமி தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் காதல் ஜோடியை வலைவீசி தேடிவந்தனர். இவர்கள் இருவரும் கடலூர் மாவட்டத்திலுள்ள தொழுதூர் விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்கையில், பச்சையம்மாள் மரணம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சம்பவத்தன்று, மணிகண்டன் மது போதையில் காதலியை சந்திக்கச் சென்ற நிலையில், மணிகண்டனை வீட்டிற்குள் விட மறுத்து பச்சையம்மாள் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரை எட்டி உதைத்து கீழே தள்ளவே, நிலை தடுமாறி விழுந்த மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். 

இதன் பின்னர் காதலுடன் சேர்ந்து வீட்டிற்குள் இருக்கும் கல்லை எடுத்து வந்து பச்சையம்மனின் தலையில் போட்டு கொடூர கொலை செய்துள்ள நிலையில், தீ விபத்து மரணமாக மாற்ற எண்ணி மண்ணெண்ணையை ஊற்றி, கியாஸை திறந்துவிட்டு தீ வைத்து எரித்ததும் தெரியவந்துள்ளது. கியாஸ் கசிவின் காரணமாக விபத்தில் பச்சையம்மாள் இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தில் நாடகமாடிய நிலையில், காதல் ஜோடி தப்பிச் சென்றுள்ளது. 

இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், படிக்கும் வயதில் சிறுமி காதலில் விழுந்து, தனது வாழ்க்கையையும் தொலைத்து, வளர்ப்பு தாயை கொலை செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை தமிழகத்தில் பதிவு செய்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur mother killed by adopt daughter with her love boy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->