சுகப்பிரசவத்தில் குழந்தை.. தம்பதியை மிரட்டும் சுகாதாரத்துறை.. பரபரப்பு வீடியோ.. பெரம்பலூரில் அட்டூழியம்.!! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்தவர் சதீஷ்குமார். இவர் சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த நிலையில், வீட்டில் சுகப்பிரசவமாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக அமைதிக்காத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதன்பின்னர் நேரடியாக வீட்டிற்கு வந்த அதிகாரிகள் எனது மனைவி மற்றும் குழந்தையை சோதனையை செய்து இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். 

மேலும், சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு வந்து சோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று கூறிய நிலையில், மருத்துவமனைக்கு செல்கையில் அங்கு சில பரிசோதனைகளை செய்துவிட்டு, நீங்கள் ஆரோக்கியத்துடன் இல்லை என்று கூறுகிறார்கள். 

இதனால் மருத்துவமனையில் அனுமதியாக வற்புறுத்தி வரும் நிலையில், உங்கள் மீது பொய் புகார் அளித்து சிறையில் அடைத்துவிடுவோம் என்றும், குழந்தையே உங்களுக்கு பிறக்கவில்லை என்று புகார் அளித்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். 

இதனையடுத்து பயந்துபோன தம்பதி செய்வதறியாது வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur Couple Tortured by Health workers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->