கோவையில் அதிர்ச்சி சம்பவம்.. குழந்தையை கடத்தி விற்பனை செய்த கும்பல் கைது..!! - Seithipunal
Seithipunal


பீகாரைச் சேர்ந்த அஞ்சலி - மகேஷ் குமார் தம்பதியினர் கோவை அப்பநாயக்கன்பட்டி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சூலூர் அருகே உள்ள ஜிம்ம நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விஜயன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர்களில் விஜயனுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை என்று தெரிகிறது. இதை விஜயன் மகேஷ்குமார் தம்பதியினரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து அவர்கள் பீகாரில் தங்களிடம் ஒரு பெண் குழந்தை உள்ளது என்றும், அதற்கு 2-1/2 லட்சம் பணம் கொடுத்தால் ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழுடன் அந்தக்குழந்தையை இவர்களிடம் ஒப்படைப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரில் இருந்து அஞ்சலியின் சகோதரி மேக குமாரி மற்றும் தாயார் பூனம் தேவி இருவரும் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை கொண்டு  வந்து, அதை ஏற்கனவே பேசியபடி மகேஷ் குமார் - அஞ்சலி தம்பதி விஜயனிடம் பணம் பெற்றுக் கொண்டு அக்குழந்தையை கொடுத்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், சைல்டுலைன் பிரிவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதில் பீகாரில் உள்ள ஒரு ஏழைத் தம்பதியிடம் 1500 ருபாய் கொடுத்து அந்த குழந்தையை விலை பேசி கொண்டு வந்து இங்கு 2-1/2 லட்சத்திற்கு விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பீகாரைச் சேர்ந்த 4 பேரும், குழந்தையை வாங்கிய விஜயனும் கைது செய்யப்பட்டுள்ளனர் .  இச்சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Peoples Arrested For Child Trafficking and Selling in Covai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->