"இந்து அல்லாதவர்கள் நுழைய தடை" பலகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து அறநிலைத்துறை! புதிய மனு! - Seithipunal
Seithipunal


பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், இந்து மதத்தில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு பலகை, பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் பழனி முருகன் கோவிலில் இந்த அறிவிப்பு பலகை திடீரென அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அடுத்தடுத்த சம்பவங்களாக பழனி முருகன் கோவிலுக்குள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு பலகை கோவிலின் முன்பு வைக்கப்பட்டு வைக்கப்பட்டு, பின்னர் அது அகற்றப்பட்டது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், உடனடியாக அகற்றப்பட்ட அந்தப் பலகை மீண்டும் அதே இடத்தில் அதே இடத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

இந்நிலையில், பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க கோரி முறையிடடபட்ட இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pazhani Murugan temple only Hindu Notice board


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->