குன்றத்தூர் அருகே கல்லூரி பேருந்து விபத்து - 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் - Seithipunal
Seithipunal


குன்றத்தூர் அருகே என்ஜினியரிங் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானது 20 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கல்லூரி பேருந்தில் இன்று காலை 8 மணி அளவில் குன்றத்தூர் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி நசுங்கி நிலையில், பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Over 20 injured in college bus accident in kundrathur near


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->