ராமநாதபுரத்தில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.!
ops press meet about ramanathapuram constituency
தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிக்கும் கடந்த 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தது. இந்த நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களும் எனக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள். 10 ஆண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை." endru பேசியுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில், ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஐந்து பேர் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
ops press meet about ramanathapuram constituency