ஓபிஎஸ் வழக்கில் திடீர்திருப்பம் | சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!
OPS HC Case 29march2023
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து, ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அளித்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
உடனடியாக ஓபிஎஸ், தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில், மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த வழக்கை விசாரணை செய்வதாக தெரிவித்தது.
இதற்கிடையே நேற்று மாலை, "தனிநீதிபதியின் தீர்ப்புக்கு எதிர்க்க தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு வரும் வரை, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை செயல்பட தடை விதிக்க வேண்டும்" என்று ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஓ பன்னீர்செல்வம் மனுவுடன் தங்கள் மனுக்களையும் விசாரிக்க கோரி மனோஜ் பாண்டியன், பிரபாகர் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் நாளை விசாரணை செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.