#BREAKING : பொது மக்களுக்கு குட் நியூஸ்.. இனி ஒரே டிக்கெட் மூலம் பேருந்துகள், ரயில்களில் பயணிக்கும் புதிய வசதி.! - Seithipunal
Seithipunal


ஒரே டிக்கெட்டில் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் முதல் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், புறநகர் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஒரே டிக்கெட்டில் மாநகர பேருந்து, புறநகர் ரயில் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One ticket travel in bus and train in Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->