நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு: மண்டபம் அருகே மீனவர் ஒருவர் மாயம், 03 பேர் மீட்பு..!
One person missing 3 rescued after boat sinks in the middle of the sea near Mandapam
ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதில் மாயமாகியுள்ளார். 03 மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில், மீட்கப்பட்டுள்ளனர்.
மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று நள்ளிரவில் (புதன்கிழமை), அனீஸ் (30), மாதவன் (28), பரிது (28), இப்ராஹிம்சா (40) ஆகிய 04 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். நால்வரும் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகின் பக்கவாட்டுப் பலகை உடைந்துள்ளது. இதன்காரணமாக விசைப்படகு கடலில் மூழ்கியுள்ளது. இதனால் படகிலிருந்த 04 மீனவர்களும் கடலில் தத்தளித்துள்ளனர்.

அந்த நேரத்தில், அந்த பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் விரைவாக செயல்பட்டு அனீஸ், மாதவன், பரிது ஆகி 03 பீரை உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால், இப்ராஹிம்சாவை நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், மீட்கப்பட்ட 03 மீனவர்களுடன் அவர்கள் இன்று காலை (வியாழக்கிழமை) கரைக்கு திரும்பியுள்ளனர்.
கரை திரும்பிய மீனவர்கள் உடனே இப்ராஹிம்சா மாயமானது தொடர்பில், மீன்வளத் துறை மற்றும் மெரைன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, 03 படகுகளில் சென்று போலீசார் மற்றும் மீது படையினர் இப்ராஹிம்சாவை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
English Summary
One person missing 3 rescued after boat sinks in the middle of the sea near Mandapam