பேத்தியை காண வந்த முதியவர் வெட்டி கொலை.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


முதியவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துகுடி மாவட்டம், மாதவநாயகர் காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் வழி பேத்தி முத்துமாலைக்கும், தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த மாரி என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

இதனை முனியசாமி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் முத்துமாலைக்கு குழந்தை பிறந்துள்ளது.அதனை காண முனியசாமி நேற்று முன்தினம் இரவில் மாரியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த மாரியின் சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே மாரியின் அண்ணன் சின்னத்தம்பி, அவருடைய இளைய தம்பி மற்றும் நண்பரான திரேஸ்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி ஆகியோர் முனியசாமியை சரமாரியாக அரிவளால் ஓட ஓட வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old man murdered in Thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->