சிறுமிகளின் ஆபாச வீடியோவை முகநூலில் பரப்பிய பூசாரி.. போக்சோவில் கைது..!
old man arrested in POCSO Near Thiruppur
சிறுமியின் ஆபாசபடத்தை பதிவேற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், கணியூர் பகுதியில் பாலாஜி. அங்குள்ள கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார். முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதில் குழந்தைகளில் ஆபாச வீடியோவை பகிர்ந்து வந்துள்ளார்.
இது குறித்து NCMEC சைபர் டிப்லைன் என்ற பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினருக்கு புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரின் செல்போன் எண் மற்றும் ஐ பி (IP address) முகவரியின் மூலம் இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
old man arrested in POCSO Near Thiruppur