தனியே வீட்டில் இருந்த 72 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த அவர், அதே பகுதியில் வசித்து வரும் புவனலட்சுமி (72) என்ற மூதாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது தனியாக இருந்த அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் மூதாட்டியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரமேஷ் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதனையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 72 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

old Lady was sexually abused


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->