தாய் கண்டிப்பு... மனமுடைந்து நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு..! தஞ்சாவூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் தாய் கண்டித்ததால் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மருங்கம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி நீலகண்டன். இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் அஸ்மிதா (19) பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், வீட்டில் வேலை செய்யாமல் எப்பொழுதும் டிவி பார்ப்பதும், தூங்குவதுமாய் இருக்கிறாய் என்று அஸ்மிதாவை தாய் கண்டித்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த அஸ்மிதா வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். இதைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அஸ்மிதாவை தேடினர். ஆனால் எங்கு தேடியும் அஸ்மிதா கிடைக்காத நிலையில், அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அது அஸ்மிதா என்பது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த அஸ்மிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த முதற்கட்ட விசாரணையில் தாய் கண்டித்ததால் அஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nursing college girl commits suicide in Thanjavur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->