பிரபாகரன் உயிரோடு இருக்காரா..? உயிரோட வந்தா பேசலாம்..! - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்..!!
NTK seeman said Lets talk if Prabhakaran comes alive
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேகனா நவநீதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவரிடம் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உலகத்தமிழர் பேரியக்க தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் "என்னிடம் இதற்கு பதில் இல்லை. சில கேள்விகள் தான் இருக்கிறது. என் தம்பி பாலச்சந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்க அண்ணன் தப்பி சென்று இருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா..?
எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக நின்று சண்டை புரிந்தவர் எங்கள் அண்ணன். தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிச்செல்லும் கோழை என நினைக்கிறீர்களா..?

இலங்கை போர் முடிந்து 15 ஆண்டுகள் முடிந்த நிலையில், பேரழிவை சந்தித்த நிலையில் 15 ஆண்டுகள் பாதுகாப்பாக எதுவும் பேசாமல் இருப்பார் என நினைக்கிறீர்களா..?
அதேபோன்று எங்கள் அண்ணன் சொல்லிட்டு வருபவர் அல்ல, வந்து விட்டு சொல்பவர். அதுதான் அவருக்கு பழக்கம். சொல்லுக்கு முன் செயல் என எங்களுக்கு கற்பித்தவர் அவர்.
எனவே தேவையற்று குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். அவர்களே மக்கள் முன்னால் தோன்றுவார் என சொல்கிறார்கள், அவர் தோன்றும் பொழுது பேசலாம்.

ஐயா பெரியாரிடம் கடவுள் இல்லை என சொல்கிறீர்களே நேரில் வந்தால் என்ன சொல்வீர்கள் என கேட்டதற்கு, அதிலிருந்து கடவுள் இருக்கார் என்று சொல்வோம் என்றார். அதுபோல எங்கள் தலைவர் ஒரு நாள் நேரில் தோன்றினால் அவர் வந்ததிலிருந்து இதைப் பற்றி பேசுவோம். இப்போ அதைப்பற்றி பேச வேண்டாம்" என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
English Summary
NTK seeman said Lets talk if Prabhakaran comes alive