விஜய்யால் சீட்டு இல்லாமல் பேச முடியாது - பரப்பரப்பைக் கிளப்பிய சீமான்.!!
ntk leader seeman speech about tvk leader vijay
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆயத்தமாகி வருகிறார். இந்த நிலையில், கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் த.வெ.க. தலைவர் விஜயை ஒருமையில் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, "என்னுடைய தம்பியை கரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வர சொன்னது யார்? உன் வீட்டு வாசல்ல எவன்டா நின்னான்..? நீ வா என்று யாரும் கூப்பிடவில்லையே, எதுக்கு வர்ற?
அஜித்தும், ரஜினியும் தன்னுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது. இதுவரைக்கும் விஜய் தமிழ், தமிழர்கள், தமிழர்கள் உரிமை, வளங்கள் என்ற ஒரு வார்த்தையாவது பேசியது உண்டா? அனைவரும் ஒன்று என்றால் கட்சியை ஆந்திராவில் ஆரம்பிக்க வேண்டியது தானே?.
ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எம்ஜிஆர் எழுதி வைக்காமல் பேசுவார். விஜயகாந்த் மக்களின் மொழியிலேயே பேசுவார். அய்யா ஸ்டாலின் கூட சின்ன சீட்டில் எழுதி வைத்து தான் பேசுவார். என் தம்பியும் எடப்பாடியும் முழு சீட்டு வைத்து பேசுவார்கள். இவரால் மழையில் பேச முடியாது; ஏனென்றால் காகிதம் நனைந்திடும்" என்று தெரிவித்தார். சீமானின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ntk leader seeman speech about tvk leader vijay