வாக்குபதிவின் போது கைதான நாதக வேட்பாளர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்களில், நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதிலும் குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. 

இதில், பொதுமக்களும், பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த நிலையில், நேற்று சென்னையில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில், வாக்குப்பதிவு கோளாறு தொடர்பாக, மத்திய சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குப்பதிவு மையத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதையடுத்து, அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். அதன் பின்னர், அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk candidate karthikeyan arrest in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->