தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.  அதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலின் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்தது இருந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் மழை பெய்கிறது. சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ் பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு புதுச்சேரி கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது மேலும் நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

November 11,12 heavy rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->