வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் காத்திருப்பு போராட்டம்..! - Seithipunal
Seithipunal


மீஞ்சூரில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் 700க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தின்போது, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான அடையாள அட்டை வழங்கிடவேண்டும், அரசே நேரடியாக ஊதியம் வழங்கிடவேண்டும், படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக முறையிட 02 மாதங்களாகியும் முதலமைச்சரை சந்திக்கவிடாமல் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர். அப்போது வடசென்னை அனல் மின் நிலையம் அருகே தரையில்கூட அமரக்கூடாது என கூறியதாக  காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்பந்த தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அதன் பின்னர், நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் அவர்களாகவே கலைந்து சென்றுள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்களின் திடீர் போராட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட போலீசார் வடசென்னை அனல்மின் நிலைய வாயிலில் குவிக்கப்பட்டதால்  நேற்று அங்கு பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

North Chennai Thermal Power Plant contract workers suddenly hold a sit in protest


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->