குண்டுவெடிப்பில் தொடர்பு? சுத்து போட்ட என்.ஐ.ஏ! மதுரையில் பெரும் பதற்றம்! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தின் முக்கிய இடமான பெரியார் பேருந்து நிலையம் அருகே காசிமார் தெருவில் வசிக்கும் முஹம்மது தாஜுத்தீன் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முஹம்மது தாஜுத்தீன் பல மாதங்களாக போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் வீட்டில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கு தொடர்பாக இஸ்லாமிய ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த இவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் இவர்களுக்கு தொடர்புடையதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் மதுரை காவல்துறையினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் காசிமார் தெரு முழுவதும் தமிழக போலீசார் மற்றும் என்.ஐ.ஏ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் உஸ்மானை ரகசிய இடத்தில் வைத்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பகுதியில் பதற்றமான சூழலில் இருந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA officers raid in Madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->