ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வீசிய சம்பவம் - கருக்கா வினோத்தை காவலில் எடுக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில்  பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் போலீசார், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது கருக்கா வினோத்தை ஏழு நாட்கள் காவலில் எடுக்க என்.ஐ.ஏ. முடிவு செய்து அதற்காக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nia officers petition of take custody karukka vinoth


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->