பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அதிலும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும். அந்த வகையில், தற்போது நவராத்திரி விழா, அக்டோபர் 11ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12ஆம் தேதி விஜயதசமி அன்று அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. 

இந்த விழாவை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இந்த நிலையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பழனி கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, நவராத்திரி விழாவின் அம்பு போடுதல் நிகழ்ச்சி அக்டோபர் 12 ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று நடைபெறுவதால் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது விஜயதசமி நாளில் காலை 11.30 மணி முதல் அனைத்து தரிசனக் கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும்.

மலைக் கோயிலின் படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் என்று மூன்று வழிப் பாதைகளில் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 11 மணிக்கு மேல் வரும் பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும் போல தரிசனத்துக்கு செல்லலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new restriction announce palani temple sami dharisanam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->