நெல்லை: 2007 வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே 2008-ல் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து 17 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு நவம்பரில் கூடங்குளம் அருகே கூத்தங்குழி கிராமத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து ரீகன் (22) மற்றும் கணேசன் ஆகிய இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2008-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி விஜயாபதி அருகே ரீகன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

இந்தக் கொலை வழக்கில், சிலுவை அந்தோனி உள்ளிட்ட 19 பேரை கூடங்குளம் போலீஸார் கைது செய்தனர். வழக்கு திருநெல்வேலி மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாகப்பன், சக்கரியாஸ், ஹால்டன் ஆகியோர் வழக்கு நடைபெறும் போதே உயிரிழந்தனர்.

இதனையடுத்து சிலுவை அந்தோனி, கணேசன், சிம்பு, ஜான் பால், வினோத், அருள் சகாயராஜ், ஏ.அன்டன், ஜேம்ஸ், மைக்கேல், மிக்கேல் அந்தோனி ஆகிய 10 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற 6 பேர் குற்றமின்றி விடுவிக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nellai koodankulam murder case judgement


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->