#JustIn : நீட் தேர்வு விண்ணப்பம்.. கடந்தாண்டை விட குறைந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை.! - Seithipunal
Seithipunal


எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தகுதி தேர்வான நீட் தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு, நாடு முழுவதும் வருகிற மே மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. 

இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து விண்ணப்பிப்பதற்கு ஏப்ரல் 6ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்தது. இதில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்காக ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு கடந்த வருடத்தை விட, இந்த வருடம் அரசு பள்ளி மாணவர்கள் குறைவாக விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டு நீட் தேர்வுக்கு 17,972 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 12,840 பேர் தேர்வு எழுதினார்கள். ஆனால், இந்த வருடம் வெறும் 14,000 அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் தான் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet Exam Govt students strength decreases Compared with Last Year


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->