தென்காசி : சொத்துக்காக மகன் எடுத்த விபரீத முடிவு - பறிபோன தாய் உயிர்.!  - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கரநாராயணன் - முருகம்மாள் தம்பதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில், சங்கரநாராயணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் முருகம்மாள் இளைய மகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே முருகம்மாள் மூத்த மகன் தன்னை கவனிக்காத காரணத்தினால் அவருக்குச் சொத்தில் பங்கு கிடையாது என்றும் கணவர் உயிரிழந்த வழக்கில் நஷ்ட ஈடாக கிடைக்கும் பணத்தையும் தர முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று முருகம்மாள் கணவன் விபத்து வழக்கு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு இளைய மகனுடன் இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலிக்குச் சென்றுள்ளார். 

அப்போது அவர்களை பின் தொடர்ந்து காரில் வந்த மூத்த மகன் தாய் முருகம்மாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதில் தாய், மகன் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தாய் முருகம்மாள்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகம்மாளின் மூத்த மகன் மற்றும் அவர்களது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near thenkasi woman died and man injury for accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->