கடலூர் : திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் அருகே சமிட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவர் மகன் ராம்பிரசாத் விவசாயி. இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

ஆனால் ராம் பிரசாத்துக்கு இந்தத் திருமணத்தில் சம்மதம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, ராம்பிரசாத் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அருகிலிருந்தவர்கள் ராம் பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு, ராம் பிரசாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near cuddalore young man sucide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->