கடலூர் : கட்டுப்பாட்டை இழந்த கார்.! 10 அடி பள்ளத்தில் பாய்ந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவர் தனது நண்பர் சஞ்சய்காந்தியுடன் நேற்று இரவு கடலூர் கம்மியம்பேட்டை ஜவான்பவன் இணைப்பு சாலை வழியாக காரில் கெடிலம் ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தார். 

இதையடுத்து இவர் காசிவிஸ்வநாதீஸ்வரர் கோவில் அருகே வளைவில் சென்ற போது திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், நிலை தடுமாறி ஓடிய கார் கெடிலம் ஆற்றில் சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதை பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனே அந்த பகுதிக்கு ஓடிவந்தனர்.

அதன் பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் 
விபத்தில் சிக்கிய சபாபதி மற்றும் அவரது நண்பர் சஞ்சய்காந்தி ஆகியோரை மீட்டனர். 

இதை தொடர்ந்து, அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது, அவர்கள் உடல் நலம் தேறி வருகின்றனர்.  இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near cuddalore car accident two peoples injury


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->