கோயம்புத்தூர் : பண மோசடி வழக்கில் காவல்துறைக்கு தண்ணிகாட்டிய பெண் கைது.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்-லலிதா தம்பதியினர். இவர்கள் உள்பட மொத்தம் ஏழு பேர் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இதில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி தரப்படும் என்று ஆசை வார்த்தை காட்டினர்.

அதுமட்டுமல்லாமல், ரூ.1லட்சம் முதலீடு செய்தால் 100 நாட்கள் கழித்து 17.5 சதவீத வட்டியுடன் ரூ.2 லட்சமாகத் திரும்ப தரப்படும் என்றும், மற்றொரு திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 20 சதவீத வட்டியுடன் பன்னிரண்டு மாதங்கள் கழித்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் திருப்பி தரப்படும் என்று பல்வேறு திட்டங்கள் அறிவித்து பொதுமக்களின் ஆசையை தூண்டியுள்ளனர்.

இதை உண்மை என்று நம்பி ஏராளமான மக்கள் இதில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், அவர்கள் தெரிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தரவில்லை. இதனால், முதலீட்டாளர்கள் நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கடந்த 2020-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர் மோசடி புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், அவர்கள் அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் ரூ.3 கோடி பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டு மோசடி செய்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரின் மனைவி லலிதாவை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near coimbatore woman arrested for money fraud case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->