திருவேற்காடு அருகே பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது.!  - Seithipunal
Seithipunal


சென்னை திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், உதவியாளராக அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்ற எட்வின் என்பவர் பணிபுரிந்து வருகிறார். 

இவர் நேற்று முன்தினம் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பேசி கொண்டு இருந்துள்ளார். இதை அந்த வழியாக வந்த பள்ளியின் முதல்வர் பார்த்துள்ளார். 

இதையடுத்து, பள்ளியின் முதல்வர் சசிகுமாரின் செல்போனை வாங்கி சோதனை செய்தார். அந்த செல்போனில், மாணவியின் ஆபாச படங்களை எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து, பள்ளியின் முதல்வர் சம்பவம் தொடர்பாக போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து சசிகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai young man arrested for obscene film make school student


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->