கரையொதுங்கிய ஆதார் போன்ற முக்கிய ஆவணங்கள்: நாங்குநேரியில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


நாங்குநேரி ஓடை அருகே ஆதார் போன்ற முக்கிய ஆவணங்கள் அடங்கிய தபால்கள் விநியோகிக்கப்படாமல் கரையோர தூங்கிக் கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

திருநெல்வேலி, நாங்குநேரி அருகே உள்ள குளம் நிரம்பியதால் உபரி நீர் கால்வாய் வழியாக வெளியேறுகிறது. இதனால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் அதனை சரி செய்யும் பணிகளில் கிராம மக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

அப்போது அங்குள்ள ஓடை ஓரத்தில் குவியலாக விநியோகிக்கப்படாத தபால்கள் கிடப்பதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் அதில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஆதார் அட்டை, எல்ஐசி, வங்கி, அரசு துறை மற்றும் தனிநபர் கடிதங்கள் போன்ற முக்கிய ஆவணங்கள் இருந்தது. 

இது குறித்து கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரை ஒதுங்கி கிடந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nanguneri important documents lying stream


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->