சொத்தை தன் பெயருக்கு எழுதி தராத தாயை, கொலை செய்து விறகுக்குள் வைத்து கொளுத்திய மகன்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பங்கஜம். இவரது மூத்த மகன் பிரகாஷ். இவர் தனது தாயின் பெயரில் உள்ள வீட்டினை, தனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு தகராறு செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், இவர்களுக்குள் இது தொடர்பாக அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இதேபோன்ற சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையால் ஆத்திரமடைந்த மகன் பிரகாஷ், தாயின் தலையில் இரும்பு குழாயால் அடித்துக் கொலை செய்துள்ளார். 

இதன் பின்னர் வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த விறகில் போட்டு தனது தாயின் உடலை எரித்து சாம்பலாக்கி உள்ளார். இந்த சம்பவத்தைச் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று அவரது மனைவி முத்துலட்சுமியையும் மிரட்டியுள்ளார். 

இதனையடுத்து சாம்பலை அப்புறப்படுத்திவிட்டு தலைமறைவாகி உள்ளார். பயத்திலேயே இருந்து முத்துலட்சுமி, அக்கம் பக்கத்தினரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தடவியல் நிபுணர்கள் மூலமாக மாதிரியை சேகரித்து இருந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் பிரகாஷை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Mother Murder by Son Due to Land Problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->