நாமக்கல் மாவட்ட மக்களை கலங்கவைத்த திருட்டு கும்பல் கைது..! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் மற்றும் வேலூர் பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகார்களை பதிவு செய்து வந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், ராசிபுரம் எஸ்.ஐ.சி சாலையில் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

இதன் போது அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்த நிலையில், காரில் இருந்த மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்கையில், இவர்கள்தான் மேற்கூறிய நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலூர் பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து காரில் இருந்த மதுரையை சார்ந்த சிவராஜ் மற்றும் விஜயசங்கர், சிவகங்கையை சேர்ந்த சதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர்களிடமிருந்து ரூபாய் 2.5 லட்சம் ரொக்கம், 25 பவுன் நகைகள், ஒரு சொகுசு, கார் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal District Major Theft Thief gang police Arrest 9 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->