திமுக நிர்வாகிகளின் முறைக்கேடு.. அதிமுக பரபரப்பு புகார்.!
Namakkal AIADMK Complaint Letter to TN Election Commission 3 Oct 2021
அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்தி திமுக நிர்வாகிகள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த திமுக நிர்வாகிகள், அரசுத்துறை மற்றும் அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
இந்த புகாரில், " நாமக்கல் மாவட்டம் ஊராட்சி குழு 6 ஆவது வார்டில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் வாக்காளர்களின் வாக்குகளை கவர, உண்மைக்கு புறம்பான செய்திகளை வாக்காளரிடம் அளித்து, அரசு அலுவலர்கள் நேரடியாக இல்லங்களுக்கு வந்து உறுப்பினராக இணைத்து உடனடி பயன் கிடைக்கும் என சொல்லி தமிழக அரசு அறிவித்துள்ளதாக, அரசு சின்னத்தை திமுக தலைவர்களோடு அச்சிட்டு தவறான நோக்கத்துடன் பொய்யான தகவலை கூறி உள்ளார்கள்.
திமுகவின் நாமக்கல் மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமாரின் உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக திமுக நிர்வாகிகள் மக்களிடத்தில் வாக்குகளை பெற முயல்வதும் நடந்துள்ளது. இதனால் தேர்தலை நியாயமான முறையில் நடத்த வழிவகை செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இந்த புகாருடன் உரிய காணொளி ஆவணமும் இணைக்கப்பட்டுள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Namakkal AIADMK Complaint Letter to TN Election Commission 3 Oct 2021